~ உமாஸ்ரீதாஸன்.
*****
ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/*****
சீரடி ஸாயி பாபா - காலை ஆரத்தி
மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்
கணேசா ஸ்வாமி
கரங்குவித்துத் துதிக்கிறோம்
ஆரத்தி பாடுதற்கு
சீரடி ஸாயி பகவான் ஆரத்தி பாடுதற்கு
அருள்புரிய வேண்டுமய்யா
கற்பகமே அற்புதமே கணபதியே சரணமையா
பிரிவு - 1
கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் ஸாயி நாதரே
பக்தியுடனும் இல்லாமலும் உமது
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே ஸத்குரு
நாதா
என்றும் உமது திருப்பாதங்களை ஸேவிக்கவேண்டுமப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளைத் தாருமய்யா
துக்காராம் வேண்டுகிறார் எமது நாமஜபம்
கேட்டு
அருள்கூர்ந்து எம் ஸம்ஸாரப் பற்றை நீக்கிடுங்களே
கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
பிரிவு - 2
அதிகாலை வேளை பாண்டுரங்கா பள்ளி எழுந்தருள்வீர்
வைஷ்ணவர் கூட்டம் கருடஸ்தம்பம்வரை அங்கே
நிற்கின்றார்
முக்கிய வாசல்வரை தேவர்கள் கூட்டமாக
நின்று
மிருதங்க தாள இசையுடனே பரவசமடைந்து
பாடுகிறார்
சுகர் சனகர் நாரதர் தும்புரு ஆகிய பக்தர்கள்
கூட்டமும்
சூலம் டமரும் ஏந்தியவாறு கிரிஜாபதியும்
உள்ளார்
கலியுக பக்தர் நாமதேவர் நின்றுகொண்டே
பாடுகிறார்
ஜனாபாயும் பின்னால் அங்கே காத்துநிற்கின்றார்
பிரிவு - 3
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீஸாயிநாத குருவே
உம் பாத கமலங்களை தரிசித்தால் பாவங்கள்
விலகிடுமே
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீஸாயிநாத குருவே
உம் பாத கமலங்களை தரிசித்தால் பாவங்கள்
விலகிடுமே
ஸம்ஸார துன்பம் வியாதிகள் நீக்கி
ஜடங்களான
எம்மைக் காத்தருள்வீரே
ஸம்ஸாரமாகிய இருண்ட இரவு
உம்மைவிட்டு
அகன்றதே
உமது யோகமாயை அஞ்ஞானிகள்
எம்மை
ஆசையில் ஆழ்த்தியதே
அந்த ஆசையைப் போக்கும் சக்திகள்
எமக்கு
சிறிதும் இல்லையே
ஏ ஸாயிநாத மஹராஜ் - உம்
முகதரிசனம்
தந்து காப்பீரே
அஞ்ஞானிகளான நாங்கள் எவ்வாறு
உம்பெருமைதனை
வர்ணிப்போம்
உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும்
கவிபிரஹ்மனுமே
சோர்ந்து விட்டனர்
அருள்கூர்ந்து உமது பெருமையை
நீரே
சொல்லவே பிரார்த்திப்போம்
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீஸாயிநாத குருவே
உம் பாத கமலங்களை தரிசித்தால் பாவங்கள்
விலகிடுமே
சரணம் சரணம் என்று பக்தர்கள் பலரும்
வாசலில்
நிற்கின்றனர்
மலர்த்தாமரை முகதரிசனத்தைத் தந்து
அவர்களைக்
காத்தருள்வீரே
யோக நிலையில்உள்ள உம்மை தரிசித்து
உள்ளம்
உவகை கொள்கின்றது
உமது வார்த்தை அமுதத்தைப் பருகி
மேலும்
உள்ளம் மகிழ்கின்றது
ஆபத்தில் உதவும் லக்ஷ்மிநாதா குழந்தைகள்
எம்மைப் பார்ப்பீரே
தாபத்தை நீக்கி அருள்வீரே சுயநலத்தை
நீக்கிப் பொறுத்தருள்வீரே
ஸாயிநாத மஹராஜ்,
உம்தரிசனம்
தந்து காப்பீரே
ஓ, ஸாயிநாத மஹராஜ்,
உம்தரிசனம்
தந்து காப்பீரே
உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும்
கவிபிரஹ்மனுமே
சோர்ந்து விட்டனர்
அருள்கூர்ந்து உமது பெருமையை
நீரே
சொல்லவே பிரார்த்திப்போம்
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீஸாயிநாத குருவே
உம் பாத கமலங்களை தரிசித்தால் பாவங்கள்
விலகிடுமே
பிரிவு - 4
பாண்டுரங்கா எழுந்தருள்வீர்
அனைவர்க்கும்
தரிசனம் தந்தருள்வீர்
இருள் நீக்கி துயில் கலைந்து
உதயமாகி
விட்டது
ஸாதுக்கள் முனிவர்கள் மஹான்கள்
யாவரும்
இங்கே இருக்கின்றார்
தூக்கமாகிய சுகத்தை நீக்கி
தரிசனம்
தந்தருள்வீர்
ரங்க மண்டபத்திலும்
ஆச்சார
வாசலிலும்
பக்தர்கள் யாவரும் ஆவலோடு இங்கே
காத்திருக்
கின்றார்கள்
ஸாயிநாதரை விழிக்கச்செய்ய
ரகுமாயியை
வேண்டுகின்றோம்
தேவர்களை எல்லாம் அழைத்துவந்து
கருடனும்
அநுமனும் துதிக்கின்றார்
கதவு திறந்தது தரிசனம் கிடைத்தது
பேரானந்தம்
அடைந்தது
விஷ்ணுதாஸன் நாமதேவர்
ஆரத்தி
ஏந்துகின்றார்.
பிரிவு - 5
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
காலை ஆரத்தி எடுப்போம்
தீபாராதனை
செய்வோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
உறவினர்களே எழுந்திருங்கள்
லக்ஷ்மிநாதனுக்கு
ஆரத்தி எடுப்போம்
தினமும் தீப ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம்
காலை
ஆரத்தி எடுப்போம்
தினமும்
ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
மனத்திடத்துடன் பாபாவைப் பணிவோம்
கிருஷ்ணநாதா - தத்தா ஸாயி - உம்மை
மனத்திடத்துடன் பணிவோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
காலை ஆரத்தி எடுப்போம்
தீபாராதனை
செய்வோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து
ஆரத்தி ஏந்தி எடுப்போம்
பிரிவு - 6
ஸாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் ஸேவையை ஏற்று
உங்கள்
உருவத்தைக் காட்டியருள்வீர்
காமம் பகை மதம் பொறாமை
ஆகியவற்றைத்
திரியாக்கி
வைராக்யம் என்ற நெய்யில் நனைத்தோம்
ஸத்குரு
ஸாயிநாதா
பக்தி என்ற நெருப்பால் விளக்கை
ஏற்றினோம்
ஸாயிநாதா
எம்குரு விளக்கை எரியச்செய்து
துர்குணங்களை
நீக்கிவிட்டீர்
எங்கள் அறியாமை இருளை அழித்து
உயிர்களுக்கு
உம்மை அறியச்செய்தீர்
ஸாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் ஸேவையை ஏற்று
உங்கள்
உருவத்தைக் காட்டியருள்வீர்
மண்ணிலும் விண்ணிலும் நிறைந்தவரே
பக்தர்கள்
மனத்தில் இருப்பவரே
தத்தாத்ரேயரே சீரடியில் என்றும்
ஸாயிநாதராய்
இருப்பவரே
பக்தர்களின் துன்பங்களை நீக்கி
சுகஅநுபவங்கள்
கொடுக்கின்றீர்
கலியுகத்தில் உம்மைப்போல
பெரும்
தெய்வம் வேறு எவரும் இல்லை
ஸாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் ஸேவையை ஏற்று
உங்கள்
உருவத்தைக் காட்டியருள்வீர்
பிரிவு - 7
பக்தி நிறைந்த மனத்துடன் காலையில்
ஜோதியை
தரிசிக்கின்றோம்
ஐந்து பிராணன்கள் என்ற ஜீவனால்
தீப
ஆரத்தி செய்கின்றோம்
பண்டரிநாதன் பாதம் தனில்
தலையை
வைத்து வணங்கி
தலையை
வைத்து வணங்கி
ஆரத்தி செய்கின்றோம் - தீப
ஆரத்தி
செய்கின்றோம்
இப்பேரின்பத்தை வார்த்தைகளால்
வர்ணிக்க
இயலாது
உமதுமுக தரிசனம் கோடி
பாவத்தைப்
போக்கிடுமே
ராயியும் ரகுமாயியும் உமது
இருபுறமும்
நிற்கின்றனர்
மயில்தோகையின் சாமரத்தால்
பக்தியுடன்
வீசுகின்றனர்
ஜோதிமயமான ஆரத்தியால்
பாபா
ஜொலிக்கிறார்
அழகே உருவான விட்டலுக்குக் காலை
ஆரத்தி
எடுக்கின்றோம்.
பிரிவு - 8
ஸாதுக்களே எழுங்கள் மஹான்களே எழுங்கள்
உங்கள்
நலனை வேண்டுங்கள்
மனித உடல் அழிந்தபின்
கடவுளைப்
பணிவது இயலாது
விடிகாலை வேளையில் எழுந்து
செங்கலின்மீது
நிற்கின்ற விட்டலின்
பாதங்களையும் அருள்நோக்கையும்
பக்தியுடன்
பணியுங்கள்
எழுங்கள் எழுங்கள் பக்த கோடிகளே
விரைந்து
ஆலயம் செல்லுவோம்
காலை ஆரத்தியை தரிசித்து
பாவங்கள்
அனைத்தையும் போக்குவோம்
தேவர்கள் தேவா ருக்மணிநாதா
துயில்
நீங்கிப் பள்ளி எழுந்திடுவீர்
திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க
திருஷ்டி
கழித்திட அநுமதி தருவீர்
கோயிலின் வாயிலில் மங்கள வாத்யங்கள்
இனிமையாய்
இசைக்கின்றன
ஸத்குரு நாதரின் காலை ஆரத்தியும்
சிறப்பாய்
நடக்கிறது
ஆச்சார வாசலில் சிங்கநாதம் பேரிகை
ஆனந்தமாய்
ஒலிக்கின்றன
கேசவராஜ விட்டலின் பாதத்தை
நலமுடன்
வணங்குகிறார் - நாமதேவர்
நலமுடன்
வணங்குகிறார்
பிரிவு - 9
ஸாயிநாத குருவே - எங்கள் ஸாயிநாத குருவே
ஸாயிநாத குருவே - எங்கள் ஸாயிநாத குருவே
உங்கள் பாதங்களில் எங்களுக்கு இடம்
அளியுங்கள்
உங்கள் பாதங்களில் எங்களுக்கு இடம்
அளியுங்கள்
தத்தராஜ குருவே - எங்கள் ஸாயிநாத குருவே
தத்தராஜ குருவே - எங்கள் ஸாயிநாத குருவே
உங்கள் பாதங்களில் எங்களுக்கு அடைக்கலம்
தருவீரே
உங்கள் பாதங்களில் எங்களுக்கு அடைக்கலம்
தருவீரே.
பிரிவு - 10 & 11
காலைவேளையில் கதிரவன் பவனி வருகிறான்
உலகிற்கு
நன்மை தருகிறான்
இந்த வேளையில் குருதியானம் செய்பவர்களை
ஒருபோதும்
கலி நெருங்கமாட்டான்
மன ஆசைகள் யாவும் நிலையாக
நீங்க
வேண்டுமென்று
ஸாயிநாதரை
வணங்குகிறோம்
இருள் நீக்கும் ஆதவன்போல ஸத்குருநாதர்
அஞ்ஞான
இருளை அழிக்கிறார்
கதிரவன்போல இல்லாமல் ஸாயிநாதர்
இரவிலும்
பகலிலும் ஜொலிக்கிறார்
மன ஆசைகள் யாவும் நிலையாக
நீங்க
வேண்டுமென்று
ஸாயிநாதரை
வணங்குகிறோம்
குருஅருளினால் கிடைத்த ஞானம்
என்றென்றும்
நிலைத்திருக்கும்
ஸமர்த்த குருவே ஸாயி நாதரே
எமக்கு
அதனை அளிப்பீரே
மன ஆசைகள் யாவும் நிலையாக
நீங்க
வேண்டுமென்று
ஸாயிநாதரை
வணங்குகிறோம்
சூரியன் தோன்றி சோம்பலை நீக்கி
உலக
உயிர்களை இயக்குகிறான்
ஸத்குரு ஸாயி துர்குணங்களை நீக்கி
உலகமக்களை
இயக்குகிறார்
மன ஆசைகள் யாவும் நிலையாக
நீங்க
வேண்டுமென்று
ஸாயிநாதரை
வணங்குகிறோம்
சிவன்-விஷ்ணு-பிரஹ்மா ஆகிய மும்மூர்த்திகளிலும்
ஈடு
இணையற்றவர் ஸத்குருநாதர்
மேலான பலன்களைத் தருவதில் உம்மையே உமக்கு
நிகராக
பக்தர்கள் நினைக்கிறார்கள்
மன ஆசைகள் யாவும் நிலையாக
நீங்க
வேண்டுமென்று
ஸாயிநாதரை
வணங்குகிறோம்
பிரிவு - 12
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே
இவ்வுலகம் முழுதும் பொய்யால்
நிறைந்தது
என்று நீர் அறிவீரே
இவ்வுலகம் முழுதும் பொய்யால்
நிறைந்தது
என்று நீர் அறிவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே
ஞானமற்றவர் குருடர்
எங்களுக்கு
தரிசனம் தந்தருள்வீரே
ஞானமற்றவர் குருடர்
எங்களுக்கு
தரிசனம் தந்தருள்வீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே
நாவு சோர்ந்து விட்டதினி என்ன செய்வேன்
என்று
பணிகிறார் தாஸகணு மஹராஜ்
நாவு சோர்ந்து விட்டதினி என்ன செய்வேன்
என்று
பணிகிறார் தாஸகணு மஹராஜ்
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள்
எங்களைக் காப்பாற்றுவீரே.
பிரிவு - 13
தாய்தந்தை சகோதரர் ஸகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று அருள்புரிவாய்
பாபா
அருள்புரிவாய்
பாபா
தாய்தந்தை சகோதரர் ஸகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று அருள்புரிவாய்
பாபா
அருள்புரிவாய்
பாபா
மோஹாந்த இருளில் தவிக்கின்றோம் நாங்கள்
மோஹாந்த இருளில் தவிக்கின்றோம் நாங்கள்
ஆண்டவனை அறியாத - ஆண்டவனை அறியாத
அஞ்ஞானி நாங்கள் - அஞ்ஞானி நாங்கள்
தாய்தந்தை சகோதரர் ஸகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று அருள்புரிவாய்
பாபா
அருள்புரிவாய்
பாபா
வீணாகக் கழித்தோம் காலத்தை எல்லாம்
வீணாகக் கழித்தோம் காலத்தை எல்லாம்
மசூதியைப் பெருக்கும் - மசூதியைப் பெருக்கும்
துடைப்பமாய் இருப்போம் - துடைப்பமாய்
இருப்போம்
தாய்தந்தை சகோதரர் ஸகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று அருள்புரிவாய்
பாபா
அருள்புரிவாய்
பாபா
எம்மை யாளும் தெய்வம் நீர்தானே ஸாயி
எம்மை யாளும் தெய்வம் நீர்தானே ஸாயி
எம்மை யாளும் ஸத்குரு - எம்மை யாளும்
ஸத்குரு
நீரே அருள்புரிவீரே - நீரே அருள்புரிவீரே
தாய்தந்தை சகோதரர் ஸகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று அருள்புரிவாய்
பாபா
அருள்புரிவாய்
பாபா
பிரிவு - 14
ஏழைகளாம் நாம் ஸ்ரீஹரிக்கு
உண்ணுவதற்கு
எதைக் கொடுப்போம்
ஜகந்நாதனாக விளங்கும் உமக்கிந்த
எளிய
ரொட்டியை எப்படிக் கொடுப்போம்
நள்ளிரவு தாண்டியும்
உம்மை
தரிசிக்கவில்லை என்றாலும்
எம்சிந்தை உம்மிடத்திலென்றும்
இருக்குமாறு
அருள்புரிவீரே
ஜகந்நாதனாக விளங்கும் உமக்கிந்த
எளிய
ரொட்டியை எப்படிக் கொடுப்போம்
பக்தர்கள் பலவகையான நைவேத்யங்களுடன்
இங்கே
ஜகந்நாதனாக
விளங்கும்
உம்
காலை ஆரத்திக்கு ஏங்கி உள்ளனர்
உம்
காலை ஆரத்திக்கு ஏங்கி உள்ளனர்
பிரிவு - 15
ஸ்ரீஸத்குரு ஸாயி பாபா - ஸ்ரீஸத்குரு
ஸாயி பாபா
இப்பூவுலகில் நாம் ஒன்றும் அறியாத பாவிகள்
நெறியில்லாதவர் வழி தெரியாதவர்
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள்
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள்
சாந்தி பொறுமையில் மேருமலை
எம்மை ஸம்ஸாரம் என்ற கடலிலிருந்து
ஸத்குருநாதா காத்தருள்வீரே
ஸத்குருநாதா காத்தருள்வீரே
திருவருள் தந்திடும் குருபரா
பயம் என்ற கடலில் மூழ்கும் - எம்மைப்
பாசம் மிகக்கொண்டு பரந்தாமா
எம்மைக் காப்பாற்றி அருள்வீரே
எம்மைக் காப்பாற்றி அருள்வீரே
|| ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத
மஹராஜ் கீ ஜய் ||
*****
சரணாகதி பிரார்த்தனை பணி -
https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html***

Thanku ஓம் சாய் ராம்
ReplyDeleteOm Sai Ram💐🎊💞
ReplyDelete