Saturday, September 22, 2018

Surrender Prayer Service - Tamil-English



சரணாகதி பிரார்த்தனை பணி



இந்த சரணாகதி பிரார்த்தனை பணியின் முக்கிய நோக்கமாவது, இதில் கலந்துகொள்ளும் அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை உயர்த்திக்கொண்டு, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் குடும்ப-சமூக-தொழில் ரீதியான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான இறையருளைப் பெற உதவிசெய்வதாகும்.

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; எந்த மதத்தையும் சேராதவராகவும் இருக்கலாம் - இந்த பிரார்த்தனை பணி ஆன்மீகரீதியாக செயல்பட்டு, பயனளிக்க வல்லது.

இந்த பிரார்த்தனை பணி, நீண்டகாலம் பங்குபெற்று, நாளடைவில் பயன்பெறும்படி வடிவமைக்கப்பட்ட ஒன்று.






இந்த வீடியோவின் தமிழாக்கம்:

* நம்முடைய எதிர்மறை ஆற்றல் செயல் இழக்கும்போது, நம் வாழ்வில் அமைதியும் அன்பும் ஆனந்தமும் நிறைந்து, நம் வாழ்க்கை அனுபவத்தரம் உயர்கிறது.

* நம்முடைய எதிர்மறை ஆற்றல், கோபமாகவும் பயமாகவும் வெறுப்பாகவும் நம்முடைய உடலிலும் மனத்திலும் நெஞ்சத்திலும் தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

* ஒரு காரணம் பற்றி வாராத, ஏற்றுக்கொள்ளும் தன்மையாலும் நம்பிக்கையாலும் அன்பினாலும் நம்முடைய எதிர்மறை ஆற்றலை செயலிழக்கச் செய்ய முடியும்.

* நம் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் நம்முடைய ஆத்மாவை வேறுபடுத்தி அறியும் போது, நம்முடைய எதிர்மறை ஆற்றல் செயல் இழக்கிறது.

* ஏனெனில், நம்முடைய ஆத்மாவே, ஒரு காரணம் பற்றி வாராத, ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் தோற்றுவாயாகும்.

* உங்கள் ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணாகதி செய்து, உங்கள் ஆத்மாவை உங்கள் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் வேறுபடுத்தி அறியும் ஆத்மஞானம் பெறுங்கள்.

* என்னுடைய இன்ஸ்டாகிராம் புரஃபைலுக்கு ( https://instagram.com/umasreedasan ) தினமும் செல்லுங்கள். புரஃபைல் ஐகானை ‘கிளிக்’ செய்யுங்கள். பிரார்த்தனையை வாசியுங்கள்.


*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****
 

Surrender Prayer Service - English Version


Surrender Prayer Service is a free global online daily spiritual prayer service conducted by me. The primary intention of this Surrender Prayer Service is to help the participants live their life consciously, architect their future, get divine assistance in facing their day-to-day challenges in their personal, professional and social life.

 

* There is no specific timing for doing this Prayer. You may choose your convenient timing.

 

* You can pray from anywhere - home, workplace or any other convenient place. Of course, you may pray from any country.

* You may belong to any religion or no religion. This is a spiritual Prayer Service that works transcending religions.

* Please note that this Prayer Service is designed for long-term participation.

 

How to participate in Surrender Prayer Service

 

Go to my instagram profile (https://www.instagram.com/umasreedasan) and click on my Profile icon & read the Prayer Statement I am posting every day. That's all. If you follow me on Instagram, you'll conveniently see my Profile icon on your Instagram home page itself. Please be assured that you have my backup prayer for you every single day you participate, if you are a regular longtime participant.

 

*****

Sunday, September 2, 2018

Vinayagar Agaval - Lyrics and Meaning in Tamil


விநாயகர் அகவல் - மூலமும் உரையும்





விநாயகர் அகவல், இறைஞானம் அடைந்து முக்தி பெறும் ஆன்மீக வழியை முழுமையாகவும் படிப்படியாகவும் எழுபத்திரண்டே வரிகளில் மிக அழகாகப் பாடப்பெற்ற ஈடு இணையற்ற அற்புத நூல். இதன் ஆசிரியர் ஔவையார். இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள், விநாயகர் அருளால் ஆத்மஞானம் பெற்று, இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

சாக்தத்தின் தாந்த்ரீக யோகமார்க்கத்தையும் சைவத்தின் சித்தாந்த ஞானமார்க்கத்தையும் மிகத் திறமையாக ஒருங்கிணைத்து, இறைஞானம் அடைந்து முக்தி பெறும் அநுபூதி மார்க்கமாக ஔவை, மிக அற்புதமாக இந்நூலில் விவரித்திருகிறார்.

முதல் மூன்று பகுதிகளில் விநாயகரை பாதாதி கேசம் வர்ணித்து ஓர் எளிமையான பக்தி நூலாக ஔவை துவங்குகிறார்.

நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகளில் ஆச்சாரியன் நயன தீட்சையாக ஆத்மஞான செயல்விளக்கம் செய்து காட்டி அருளிய அற்புதத்தை விவரிக்கிறார்.

ஆறாம் பகுதி தொடங்கி பத்தாம் பகுதி வரையில் மறைப்பு சக்தியான திரோதான சக்தி மறைந்து அருட்சக்தியாக ஆத்மாவில் பதிந்து சக்திநிபாதம் உண்டாகும் அற்புதத்தை தாந்த்ரீக யோகமார்க்கத்தில் விவரிக்கிறார்.

பதினொன்றாம் பகுதி தொடங்கி பதினான்காம் பகுதி வரையில், இறைஞானம் அடைந்து முக்தி அடையும் அற்புதத்தை சித்தாந்த ஞானமார்க்கத்தில் விவரிக்கிறார்.

*****

இந்நூலின் திரண்ட கருத்து:


விநாயகப்பெருமானே, என் ஆத்மாவை, என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் வேறுபடுத்தி, நான் அனுபவத்தில் அறியும்படி செய்தருளினாய். பின்னர், என் ஆத்மாவை, என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் உள்முகமாகப் பிரித்து, நான் அனுபவத்தில் உணரும்படி செய்தருளினாய். பின்னர், என் ஆத்மாவையும் என் ஆத்மாவினுள் விளங்கும் உன்னையும் உனக்குள் விளங்கும் உமாதேவியையும் உமாதேவிக்குள் விளங்கும் சிவபெருமானையும் எனக்கு தரிசனம் செய்வித்தருளினாய். பின்னர், சிவபெருமானுக்குள் விளங்கும் அமுதத்தை நுகர்வித்து எனக்கு வீடுபேறு அளித்தருளினாய்.

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

மூலம்:


விநாயகர் அகவல் - ஔவையார்



சீதக் களபச்   செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு   பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும்   பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில்   வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும்   பெரும்பாரக் கோடும் (5

Friday, October 20, 2017

Kanakadhara Stotram in Tamil



கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம் வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.

ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியை இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின் மனைவியாக வழிபடவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின் இவ்விரு தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட இயலும்?

இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும், மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

மூல முரட்டு சமஸ்கிருத சுலோகங்களை விடவும் அழகான இந்த தமிழ் பாசுரங்களைப் பாடினாலே ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய்க் கிட்டும் என்பது என்னுடைய கருத்து.

- உமாஸ்ரீதாஸன்.

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

Wednesday, May 10, 2017

Welcome


Shirdi Sri Sai Baba

சரணாகதியில் நம்பிக்கையுள்ள ஆன்மீக நாட்டம் கொண்ட சீரடி ஸ்ரீஸாயிநாதரின் தமிழ் பக்தர்களுக்கான தளம் இது. குருநாதரின் திருவருளால் இம்மையிலேயே, தேஹத்தில் புதைந்து கிடக்கும் ஆன்மாவை மீட்டு இறைவனின் திருவடிகளில் சேர்க்கும் திருவடிப்பேறு பெற விளையும் இந்த பக்தர்களுக்காக, தினசரி பாராயணத்தின் பொருட்டு, ஏழு தமிழ் கிரந்தங்கள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பாராயண கிரமமாவது:

Sri Nammazhvar

வியாழக்கிழமைதோறும் குருதீபம் பாராயணம்.

வெள்ளிக்கிழமைதோறும் அநுபூதி தீபம் பாராயணம்.

சனிக்கிழமைதோறும் புருஷோத்தமதீபம் பாராயணம்.

ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரார்த்தனை தீபம் பாராயணம்.

திங்கட்கிழமைதோறும் ஈசுவரதீபம் பாராயணம்.

செவ்வாய்க்கிழமைதோறும் அநுஷ்டான தீபம் பாராயணம்.

புதன்கிழமைதோறும் சரணாகதிதீபம் பாராயணம்.

Sri Ramanujar

பக்தர்கள் இது தொடர்பான தங்கள் சந்தேகங்களுக்கு உமாஸ்ரீதாஸனை மின்னஞ்சல் (umasreedasan@gmail.com) மூலமாகத் தொடர்புகொள்ளலாம்.

பக்தர்கள் குருநாதர் திருவடித் திருவருள் பெற்று இந்த இப்பிறவியிலேயே பரபுருஷனின் திருவடிப்பேறு பெற வாழ்த்துக்களுடன்

உமாஸ்ரீதாஸன்.

*** 


சரணாகதி பிரார்த்தனை பணி - 

 https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html 


***