Friday, December 29, 2017

Shirdi Sai Baba Morning Arathi - Translated in Tamil - Lyrics



பாபாவின் ஆரத்தியை தினமும் பாடி, அவருடைய பாதங்களில் சரணடையும் பக்தர்களுடைய நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் பாபா வழிநடத்தி, அவர்களுடைய ஆத்மாவை, அவர்களுடைய நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் உள்முகமாக வேறுபடுத்தி ஆத்ம அனுபவம் பெறச்செய்கிறார். இதனால், இம்மையில் இந்த பக்தர்களுடைய வாழ்க்கை அனுபவத்தரம் உயர்வதோடு, மறுமையில் இறைஞானம் பெற்று ஆன்மீகப் பிரபஞ்சத்தைக் கண்டு இறையுலகில் இனிது வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

~ உமாஸ்ரீதாஸன்.

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

சீரடி ஸாயி பாபா - காலை ஆரத்தி


மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்

கணேசா ஸ்வாமி
கரங்குவித்துத் துதிக்கிறோம்
ஆரத்தி பாடுதற்கு
சீரடி ஸாயி பகவான் ஆரத்தி பாடுதற்கு
அருள்புரிய வேண்டுமய்யா
கற்பகமே அற்புதமே கணபதியே சரணமையா

பிரிவு - 1

கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர்  ஸாயி நாதரே

பக்தியுடனும் இல்லாமலும் உமது
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே ஸத்குரு நாதா

என்றும் உமது திருப்பாதங்களை ஸேவிக்கவேண்டுமப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளைத் தாருமய்யா
துக்காராம் வேண்டுகிறார் எமது நாமஜபம் கேட்டு
அருள்கூர்ந்து எம் ஸம்ஸாரப் பற்றை நீக்கிடுங்களே

கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர்  ஸாயி நாதரே

Shirdi Sai Baba Night Arathi - Translated in Tamil - Lyrics



பாபாவின் ஆரத்தியை தினமும் பாடி, அவருடைய பாதங்களில் சரணடையும் பக்தர்களுடைய நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் பாபா வழிநடத்தி, அவர்களுடைய ஆத்மாவை, அவர்களுடைய நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் வேறுபடுத்தி ஆத்ம அனுபவம் பெறச்செய்கிறார். இதனால், இம்மையில் இந்த பக்தர்களுடைய வாழ்க்கை அனுபவத்தரம் உயர்வதோடு, மறுமையில் இறைஞானம் பெற்று ஆன்மீகப் பிரபஞ்சத்தைக் கண்டு இறையுலகில் இனிது வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

~ உமாஸ்ரீதாஸன்.


*****

சீரடி ஸாயி பாபா - இரவு ஆரத்தி


மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்

பிரிவு - 1

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

உயிர்கள் அனைத்திலும் நிறைந்தவரே
தனித்தும் வாழ்கின்றீர்
உலகிலும் நிறைந்துள்ளீரே - உமக்கு
தீப ஆரத்தி சுற்றுகிறோம்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

ராஜஸ தாமஸ ஸத்வ குணங்கள்
மாயையால் உருவானது - பின் அந்த
மாயையிலிருந்து எம்மை நீக்கி
குருபரா நீர் காக்கின்றீர்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

ஏழு கடல் தனையும் உமது விளையாட்டுத் தலமாக்கி
உம் திருவிளையாடலை அதற்கு மேலும்
விரிவுபடுத்திய வித்தகரே

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

கண்களுக்குக் காட்சிப் பொருளாய்
பெரிய உலகையே ஆக்கியவர்
கபடமில்லாத அருள்நோக்குடைய
ஸ்வாமியாம் ஸத்குருநாதா
என்று துக்காராம் கூறுகிறார்
தீப ஆரத்தி சுற்றுகிறோம்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்.