Friday, December 29, 2017

Shirdi Sai Baba Morning Arathi - Translated in Tamil - Lyrics




பாபாவின் ஆரத்தியை தினமும் பாடி, அவருடைய பாதங்களில் சரணடையும் பக்தர்களுடைய நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் பாபா வழிநடத்தி, அவர்களுடைய ஆத்மாவை, அவர்களுடைய நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் உள்முகமாக வேறுபடுத்தி ஆத்ம அனுபவம் பெறச்செய்கிறார். இதனால், இம்மையில் இந்த பக்தர்களுடைய வாழ்க்கை அனுபவத்தரம் உயர்வதோடு, மறுமையில் இறைஞானம் பெற்று ஆன்மீகப் பிரபஞ்சத்தைக் கண்டு இறையுலகில் இனிது வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

~ உமாஸ்ரீதாஸன்.

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

சீரடி ஸாயி பாபா - காலை ஆரத்தி


மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்

கணேசா ஸ்வாமி
கரங்குவித்துத் துதிக்கிறோம்
ஆரத்தி பாடுதற்கு
சீரடி ஸாயி பகவான் ஆரத்தி பாடுதற்கு
அருள்புரிய வேண்டுமய்யா
கற்பகமே அற்புதமே கணபதியே சரணமையா

பிரிவு - 1

கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர்  ஸாயி நாதரே

பக்தியுடனும் இல்லாமலும் உமது
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே ஸத்குரு நாதா

என்றும் உமது திருப்பாதங்களை ஸேவிக்கவேண்டுமப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளைத் தாருமய்யா
துக்காராம் வேண்டுகிறார் எமது நாமஜபம் கேட்டு
அருள்கூர்ந்து எம் ஸம்ஸாரப் பற்றை நீக்கிடுங்களே

கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர்  ஸாயி நாதரே

Friday, October 20, 2017

Kanakadhara Stotram in Tamil



கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம் வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.

ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியை இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின் மனைவியாக வழிபடவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின் இவ்விரு தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட இயலும்?

இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும், மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

மூல முரட்டு சமஸ்கிருத சுலோகங்களை விடவும் அழகான இந்த தமிழ் பாசுரங்களைப் பாடினாலே ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய்க் கிட்டும் என்பது என்னுடைய கருத்து.

- உமாஸ்ரீதாஸன்.

*****

கனகதாரா ஸ்தோத்திரத்துக்கு கவிஞர் கண்ணதாசன் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பாடலைக் கீழே கேட்கலாம். இதன் வரிகளுக்கு பின்வரும் வலைத்தளப் பக்கம்  செல்லவும் - https://prarthanadeepam.blogspot.com/p/kanakadhara-stotram-tamil-kannadasan.html





Wednesday, May 10, 2017

Welcome


Shirdi Sri Sai Baba

சரணாகதியில் நம்பிக்கையுள்ள ஆன்மீக நாட்டம் கொண்ட சீரடி ஸ்ரீஸாயிநாதரின் தமிழ் பக்தர்களுக்கான தளம் இது. குருநாதரின் திருவருளால் இம்மையிலேயே, தேஹத்தில் புதைந்து கிடக்கும் ஆன்மாவை மீட்டு இறைவனின் திருவடிகளில் சேர்க்கும் திருவடிப்பேறு பெற விளையும் இந்த பக்தர்களுக்காக, தினசரி பாராயணத்தின் பொருட்டு, ஏழு தமிழ் கிரந்தங்கள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பாராயண கிரமமாவது:

Sri Nammazhvar

வியாழக்கிழமைதோறும் குருதீபம் பாராயணம்.

வெள்ளிக்கிழமைதோறும் அநுபூதி தீபம் பாராயணம்.

சனிக்கிழமைதோறும் புருஷோத்தமதீபம் பாராயணம்.

ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரார்த்தனை தீபம் பாராயணம்.

திங்கட்கிழமைதோறும் ஈசுவரதீபம் பாராயணம்.

செவ்வாய்க்கிழமைதோறும் அநுஷ்டான தீபம் பாராயணம்.

புதன்கிழமைதோறும் சரணாகதிதீபம் பாராயணம்.

Sri Ramanujar

பக்தர்கள் இது தொடர்பான தங்கள் சந்தேகங்களுக்கு உமாஸ்ரீதாஸனை மின்னஞ்சல் (umasreedasan@gmail.com) மூலமாகத் தொடர்புகொள்ளலாம்.

பக்தர்கள் குருநாதர் திருவடித் திருவருள் பெற்று இந்த இப்பிறவியிலேயே பரபுருஷனின் திருவடிப்பேறு பெற வாழ்த்துக்களுடன்

உமாஸ்ரீதாஸன்.

*** 


சரணாகதி பிரார்த்தனை பணி - 

 https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html 


***