கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம் வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.
ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய
உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியை
இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின் மனைவியாக வழிபடவேண்டும் என்று வேதம்
வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின் இவ்விரு தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த
ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட
இயலும்?
இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும்,
அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும், மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.
மூல முரட்டு சமஸ்கிருத சுலோகங்களை விடவும்
அழகான இந்த தமிழ் பாசுரங்களைப் பாடினாலே ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய்க் கிட்டும் என்பது
என்னுடைய கருத்து.
*****
கனகதாரா ஸ்தோத்திரத்துக்கு கவிஞர் கண்ணதாசன் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பாடலைக் கீழே கேட்கலாம். இதன் வரிகளுக்கு பின்வரும் வலைத்தளப் பக்கம் செல்லவும் - https://prarthanadeepam.blogspot.com/p/kanakadhara-stotram-tamil-kannadasan.html